| பயிர் பாதுகாப்பு ::  வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            
              
                வெள்ளரி தேமல்: வெள்ளரி தேமல் நச்சுயிரி  | 
               
              
                தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - தொடர்ச்சியான அல்லது தொடர்ச்சியற்ற வெளிறிய மஞ்சள் நிறக் கோடுகள், இலை நரம்புகளுக்கு இடையில் இலை விளிம்பிலிருந்து பரவிக் காணப்படும். 
 
                    - இலைகள் கறுத்து, சுருண்டு, இலை விளிம்புகள் மடிந்து இலைகள் கொத்தாக உச்சிப்பகுதியில் நிமிர்ந்து காட்சியளிக்கும். 
 
                    
                    - இந்நோயின் ஆரம்பத்தில் இலைப் பரப்புகள், இளம் கன்றுகளின் இலைகளிலும் மஞ்சள் நிற, வெளிறிய தேமல் போன்ற கோடுகள் ஆங்காங்கு தென்படும். 
 
                    - இலைகள் வழக்கத்திற்கு மாறாக குறுகி, சிறியதாகவும் மரங்கள் வளர்ச்சியின்றி குட்டையாகவும்  இருக்கும். அதிகம் பாதிக்கப்பட்ட மரங்கள் குலை தள்ளாது. இவற்றில் நச்சுயிரிகள் அதிக எண்ணிக்கையில் வாழும்.
                    
 
                    - இந்நோய் வெள்ளரி தேமல் நச்சுயிரியால் (CMV) பரவுகின்றது. 
 
                    - நோய் பாதித்த மரத்தின் கன்றுகளை நடுவதாலும், பூசணி வகைகளில் வாழும் அசுவினிகளான  ஏபிஸ் காஸிபி மற்றும் ஏபிஸ்  மெய்டிஸ் போன்றவற்றாலும் இந்நோய் பரவுகின்றது.
                    
 
                    | 
               
              
                
                  
                    |   | 
                      | 
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    |   | 
                    வெளிறிய மஞ்சள் நிறக் கோடுகள் | 
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  | 
               
              
             
              
                
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  
                   
                    
                      - தோட்டத்தில் களைகளின்றி சுத்தமாகப் பராமரிக்கவும். 
 
                      - பாதிக்கப்பட்ட கன்றுகளை நடுதல் கூடாது. 
 
                      - வயல் அருகில் களைகள் இருந்தாலும் நச்சுயிரி அதில் தங்கி இருக்கும் ஆதலால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். 
 
                      - பூசணி, வெள்ளரி மற்றும் பிற பூசணி வகைப் பயிர்களையும் வாழைத் தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிடக் கூடாது. 
 
                      
                      - தோட்டத்தை தினசரி கவனித்து நோய்த் தொற்றுள்ள வாழையினை உடனே அகற்றி, உரிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும். 
 
                      
                      - அசுவினி பேன்ற நோய்க் கடத்திக் காரணிகளை கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 1 மி.லி/லி அல்லது டெமட்டான் 2 மி.லி/லி   ஏதேனும் ஒரு மருந்தைத் தெளிக்கவும். 
 
                      
                     
                     | 
                 
                
                          | 
           
         
  |